மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 14 டிசம்பர், 2009

அபுதாபியில் கனமழை




வியாழன் அலுவலத்தில் இருந்து திரும்பும் போதே வானம் கருமேகங்களுடன் காட்சியளித்தது. குளிர் சற்று கூடியிருந்தது. என்னுடன் வந்த கேரளா நண்பர் நாளை மழை வரும் என தெரிவித்தார். அதற்கு நான் சும்மா தூறல் வரும். இங்க எங்க ஊர்ல மாதிரி மழை வரப்போகுது என்றேன்.

வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலையில் சாவகாசமாக எழுந்தேன். வெளியில் வந்து பார்த்தால் லேசான சாரல் இருந்தது. கடந்த ஆறுமாதமாக தொடமுடியாத அளவிற்கு கொதித்த தண்ணீர் அன்று ரொம்பவே குளிர்ந்தது. அன்றுமாலை துபாயில் திரு.லியோனி பட்டிமன்றம் இருந்தது. அதற்கான இலவச டிக்கெட் எங்களிடம் இருந்தது (போன வாரம் துபாய் போனபோது உறவினர் ஒருவருடன் மதிய உணவருந்த அஞ்சப்பர் உணவகம் சென்றோம். எனது உறவினருக்கு உணவக நண்பர் பழக்கம் என்பதால் எத்தனை டிக்கெட் வேண்டும் என கேட்டு கொடுத்திருந்தார்). எனவே அண்ணா எனக்கு போன் செய்து துபாய் கிள்ம்புவோமா என்று கேட்டார். நான் மழை வருது இந்த மழையில துபாய் போகணுமா? என்றேன். மழை வராது வா போகலாம் என்றார்.

இந்த குளிரில் அபுதாபியில் இருந்து துபாய் செல்லவேண்டாம் என்று முடிவு செய்த நான் இல்லை அண்ணா நான் வரவில்லை என்றதும் அவர் குடும்பத்துடன் கிளம்பிச் சென்றுவிட்டார்.அங்கும் மழை பெய்ததாக அவர் போன் மூலம் தெரிவித்தார்.

நான் அறையை விட்டு எங்கும் செல்லவில்லை. அன்று முழுவதும் லேசான சாரலுடனே கழிந்தது. சனிக்கிழமையும் தூறலுடன் கழிந்தது. இரண்டு நாள் விடுமுறைக்குப்பின் ஞாயிறு காலை வேலைக்குப் போக எழுந்து குளிக்கச் சென்றால் வெளியே மழை சோவென்று கொட்டிக் கொண்டிருந்தது. வேலைக்கு கிளம்பியவர்கள் எல்லாம் மழையினால் எப்படி போவதென்ற யோசனையுடன் நின்றனர். மழை விடுவதாக தெரியவில்லை. வீதியெங்கும் வெள்ளமாய மழை நீர். அலுவலக காரில் செல்வோரெல்லாம் தலையில் பிளாஸ்டிக் கவரை மாட்டிக் கொண்டு கிளம்பினர்.

நான் சிறிது நேரம் பார்த்துவிட்டு போகலாம் என்று நினைத்து கணிபபொறியில் வலைப்பூக்களை மேய்ந்து கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் மழை விட்டதும் அவசர அவசரமாக கிளம்பினேன். ஒருவழியாக அலுவலகம் வந்து எனது கணினியை ஆன் செய்து அப்பாடா என்று உட்கார்ந்த போது வெளியில் மீண்டும் இருட்டத் தொடங்கியது. சிறிது நேரத்தில் 'சடச்சட' என்று பெய்த மழை அரைமணி நேரத்திறகு மேல் விடாமல் கொட்டித்தீர்த்தது.

எனது அலுவலகம் இரண்டாவது மாடி, நான் அமர்ந்திருக்கும் இடமோ ஒரு மூலையில்... எனவே மேலே இருந்து நான் மழையை ரசிக்க ஆரம்பித்தேன். மழைநீர் தெப்பமாக காட்சியளித்தது. மழை நீர் வடிவதற்குள் மதியம் மீண்டும் ஒரு மழை. நான் எழுந்து நின்று மழையை ரசித்துக் கொண்டிருக்கும் போது அருகில் வந்த எனது மேலதிகாரி (அவர் லெபனான்), 'இப்ப இந்தியா மாதிரி இருக்கா?' என்றார். நான் 'ஆம்' என்றதும் 'இந்தியா போல்தான் லெபனானும்' என்றார்.

மாலை அலுவலகம் முடிந்து கிளம்பும்போது மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது.நானும் எனது நண்பரும் மழையோடு கிளம்பினோம். இரவு விட்டுவிட்டு மழை பெய்தது.

கடந்த மூன்று நாட்களாக எப்போதாவது எட்டிப்பார்த்த சூரியன் இன்று காலை பாலைவனப் பூமியில் பளிச்சென்று தெரிந்தான்.

இன்று மழை இல்லை இருந்தும் வானம் ஒரு சில நேரங்களில் கருமேகங்களால் சூழப்படுகிறது. மழை பெய்யலாம்.

3 எண்ணங்கள்:

செ.சரவணக்குமார் சொன்னது…

அழகா எழுதியிருக்கீங்க நண்பா. நானும் நேற்று இதைப் பற்றி எழுதியிருக்கிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆம் நண்பா,

படித்தேன். நன்றாக இருந்தது.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

Congrats!

Your story titled 'மனசு: அபுதாபியில் கனமழை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 14th December 2009 10:20:02 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/153010

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team


தமிழிஷ் மற்றும் தமிழிஷில் வலம் வந்து எனக்கு வாக்களித்து பிரபல இடுகையாக்கிய வலை நண்பர்களுக்கும் நன்றி.