மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 19 ஜனவரி, 2010

விவாகரத்து சுனாமியில் காதல் திருமணங்கள்


காதல்... இந்த மூன்றெழுத்து இன்று உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவிக்கிடக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. வசதிகள் அற்ற கிராமத்திலும் வயல்வெளிகளில் வாய்க்கால் நீராக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அந்தக்கால காதல்களில் கண்ணியம் இருந்தது ஆனால் இந்தக்கால காதலில் அது சற்று குறைவு என்பதே உண்மை. இருப்பினும் காதல் என்பது எல்லா காலத்திலும் எல்லா இடத்திலும் ஒன்றாக பயணிக்கும் காட்டாறுதான்.

காதல் காலமாற்றத்தில் பல பரிமாணங்களைப் பெற்று எவரெஸ்டாய் வளர்ந்துள்ளது. அந்தக்காலத்தில் காதலிப்பதே பெரிய குற்றமாக கருதப்பட்டது.

காதலுக்கு மனிதர்கள் மட்டுமல்ல... ஜாதி, மதம் எல்லாமே எதிராக இருந்தன. அப்போது காதலில் ஜெயிப்பது என்பது காதலித்தவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று காதலித்து திருமணம் செய்து நல்ல நிலையில் இருக்கும் எனது நண்பனின் அப்பா அடிக்கடி சொல்லுவார். அப்படி ஜெயித்தவர்கள் வாழ்க்கையில் தோற்றதில்லை என்பார். அதற்கு அவரே நல்ல உதாரணம். அவர் பேரன் பேத்தி எடுத்து விட்டாலும் இன்றும் கணவன் மனைவிக்குள் இருக்கும் நேசம், பாசம், காதல் குறிப்பாக விட்டுக் கொடுக்கும் தன்மை எல்லாம் அவர் மீதான மரியாதையை எனக்குள் சிம்மாசனம் இட்டு அமர்த்தியுள்ளது.

காதலுக்கு மனிதர்கள் மட்டுமல்ல... ஜாதி, மதம் எல்லாமே எதிராக இருந்தன. அப்போது காதலில் ஜெயிப்பது என்பது காதலித்தவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று காதலித்து திருமணம் செய்து நல்ல நிலையில் இருக்கும் எனது நண்பனின் அப்பா அடிக்கடி சொல்லுவார். அப்படி ஜெயித்தவர்கள் வாழ்க்கையில் தோற்றதில்லை என்பார். அதற்கு அவரே நல்ல உதாரணம். அவர் பேரன் பேத்தி எடுத்து விட்டாலும் இன்றும் கணவன் மனைவிக்குள் இருக்கும் நேசம், பாசம், காதல் குறிப்பாக விட்டுக் கொடுக்கும் தன்மை எல்லாம் அவர் மீதான மரியாதையை எனக்குள் சிம்மாசனம் இட்டு அமர்த்தியுள்ளது.

நாம் அன்றைய காதல் பற்றியும் காதலர்கள் பற்றியும் இங்கு பார்க்கப் போவதில்லை. இன்றைய காதல் திருமணங்களும் விவாகாரத்துகள் குறித்துத்தான் பார்க்கப் போகிறோம்.

இன்று, காதல் என்பது பள்ளிக்கூடத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. அதுவும் பள்ளிக்கு கட் அடித்து விட்டு பார்க்கிலும் பீச்சிலும் திரையரங்கிலும் காதலிக்கிறார்கள். இந்த காதல் எவ்வளவு தூரம் போகும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனால் கண்டிப்பாக படிப்பு ஊத்திக்கும் என்பது உண்மை.

கல்லூரி மற்றும் வேலை செய்யும் இடங்களில் காதல் கொள்ளும் ஜோடிகள் கல்யாண பந்தத்தில் இணைவதற்கு இப்போது எதிர்ப்புகள் குறைந்து விட்டன என்பது நிதர்சனம். அதனால் காதல் கல்யாணங்கள் பெருகிவிட்டன. வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் காதல் ஜோடிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால், காதலிக்கும் போது இனிக்கும் உறவு திருமணத்திற்குப் பிறகு கசப்பது ஏனோ தெரியவில்லை. இன்று பெரும்பாலான காதல் திருமணங்கள் சில நாட்களில் விவாகாரத்தை நோக்கி போவது என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

எனது நண்பரின் தம்பி காதலித்து அண்ணனுக்கு முன்னரே எதிர்ப்பிற்கு இடையே திருமணம் செய்து கொண்டார். பின்னர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ள, சந்தோஷமாக சென்ற காதல் வாழ்வின் அடையாளமாக அழகிய குழந்தை ஒன்று பிறந்த்து. சந்தோஷமாக சென்ற அவர்களுக்குள் பிரச்சினை என்னும் சுனாமி எட்டிப்பார்க்க, தினம் தினம் சண்டை... மாமியார் வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு தாய் வீடு செல்வது பின்னர் திரும்பி வந்து மீண்டும் சண்டையிடுவதும் வாடிக்கையாகிவிட,சண்டையின் முடிவாக தாய் வீட்டிலே தங்கிவிட்டாள்.

அவளை அழைக்க நண்பனின் தம்பி பலமுறை சென்றும் காதல் மனைவியோ மனம் இரங்கவில்லை. கோபம் கொண்ட காதல் கணவன் கை நீட்டிவிட்டான். பிரச்சினை பூதகரமாகிவிட்டது.

நண்பருக்கு இந்தியாவில் இருந்து போன் மேல் போன் இரண்டு பக்க நியாயங்களும் செல்பேசி வழியே அவரது காதுக்குள் நுழைந்து அவரது மண்டையை சூடாக்கியது. வேலை செய்யமுடியாமல் அவர் கவலைகளை சுமந்தபடி, அவரது நிலைகண்டு நான் கேட்ட போது சொன்னதுதான் இந்தக் கதை.

அவர் தன் தம்பி மாமனாரின் நலம் விரும்பி ஒருவருக்கு போன் செய்து யாரிடமும் சொல்லாமல் நடந்த திருமணம் என்பதால் என் தம்பி எங்களிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறான். அதே போல் அந்தப் பெண்ணும் அவனை முழுவதும் நம்பி வந்தவள், எங்கள் குடும்பத்தில் ஒருத்தி, அவளது மனதில் உள்ளதை கேளுங்கள் ஒத்துவந்தால் பாருங்கள் இல்லை வெட்டி விட்டுவிடுங்கள். இல்லை எங்கள் தம்பி மீது தவறு என்று நினைத்தால் தூக்கில் தொங்க விடுங்கள் என்று சொல்லிவிட்டார்.

எனக்கு அவர் மீது கோபம் வந்தது. இவரிடம் இதற்கு முடிவு என்ன என்று கேட்டால் இருவரது வாழ்வையும் முடிக்கஸ் சொல்கிறாரே என்று. ஆனால் நான் அவரிடம் கேட்கும் முன்னரே அவரே தொடர்ந்தார்.

வேற என்ன சொல்லமுடியும் சொல்லுங்கள், அவனிடம் படித்துப் படித்துச் சொன்னேன்... ம்... காதல் கண்ணை மறச்சுடுச்சு, கேட்க மறுத்துட்டான். அந்தப் பெண்ணிடமும் எங்கள் குடும்பம் வசதியில்லாதது அவனை நம்பி வந்திட்டு பின்னால வருத்தப்படக்கூடாது என்றேன். அவளும் கேட்கலை... ஒரு நாள் கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டாங்க. என்ன செய்ய காதலிக்கும் போது நல்லது மட்டுமே தெரியும் காதலர்களுக்கு திருமண வாழ்க்கையில் நல்லது தெரியாமல் போய்விடுகிறது என்றாரே பார்க்கலாம். அதில் உண்மை இருக்கத்தானே செய்கிறது.

இப்ப நண்பரின் தம்பி வாழ்க்கை விவாகாரத்தை நோக்கி... பாவம் அந்தக் குழந்தை... அதன் எதிர்காலம்...??????.

இது போல் நிறைய காதல் திருமணங்கள் நீதிமன்றங்களின் நிழலில். புரிந்து காதலித்தால் வாழ்க்கை இனிக்கும். புரியாவிட்டால் மனங்களுக்குள் பிரிவினை...

இன்றைய காதல்கள் காதலிக்கும் போது பசுமையாகவும் திருமணத்திற்குப் பின் பாலைவனமாகவும் மாற யார் காரணம்?

காதல் என்பது மனங்களின் மனசாட்சியாக இருந்தால் காதல் திருமணங்கள் கண்டிப்பாக இனிக்கும். இன்றைய உலகில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்புகள் குறைந்து விட்டன. ஆனால் காதல் திருமண விவாகாரத்துக்கள் பெருகிவிட்டன.

காதலிக்கும் போதே பிளஸ் மைனஸ் தெரிந்து காதலித்தால் கண்டிப்பாக கடைசி வரை காதல் இனிக்கும்.

-சே.குமார்

5 எண்ணங்கள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

அவசியமான பதிவு...

'பரிவை' சே.குமார் சொன்னது…

தங்கள் கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி சங்கவி.

துபாய் ராஜா சொன்னது…

//காதலிக்கும் போதே பிளஸ் மைனஸ் தெரிந்து காதலித்தால் கண்டிப்பாக கடைசி வரை காதல் இனிக்கும்.//

உண்மையான உண்மை. நல்லதொரு பகிர்வு.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி துபாய் ராஜா.

M.Thevesh சொன்னது…

உள்ளங்களைக்காதலித்தால் திருமணம்
நிலைத்திருக்கும்.உடலைக்காதலித்தி
ருந்தால் ஆசை அறுபது நாள் மோகம்
முப்பது நாள் என்று தொன்னூறு நாளின் பின் விவாகரத்தில் வந்து
நிற்கும்.