மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 24 ஜூலை, 2013

சினிமா செய்திகள் : கே.ஆர்.விஜயா , ஆண்ட்ரியா , ஐஸ்வர்யா அர்ஜூன்

மீண்டும் நடிப்பு களத்தில் குதித்த கே.ஆர்.விஜயா
ரசிகர்களால் புன்னகை அரசி என்று அழைக்கப்பட்டவர் கே.ஆர்.விஜயா. பழம்பெரும் நடிகையான இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
உடல் நிலையை கருதில் கொண்டு நடிப்பதில் இருந்து விலகி இருந்த கே.ஆர்.விஜயா தற்போது நிலாவின் மழை என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை எஸ்.பி.ஆர்.பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ரவிஷங்கள் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.பி.சுகுமார் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.பி.ஆர் இயக்குகிறார்.


படத்தில் கே.ஆர்.விஜயா சமூக சிந்தனையுள்ள டாக்டர் வேடத்தில் நடிக்கிறார். பொதுமக்களுக்கு சேவை செய்வதே லட்சியம் என்ற உயர்ந்த சிந்தனையுடன், குறைந்த வருமானம் வந்தாலும் போது என்று நினைத்து மக்களுக்கு உதவும் டாக்டரக செயல்படும் இவருக்கு, சவாலாக ஒரு நிகழ்வு ஏற்படுகிறது. உயிருக்கு போராடும் வாலிபரை காக்கும் பொறுப்பு அவரை வந்து சேருகிறது. அந்த இளைஞரை நோயிலிருந்து மீட்கும் போராட்டத்தில் வெற்றி பெற்றாரா என்பதே கிளைமாக்ஸ்.
முக்கிய வேடத்தில் பாண்டு நடிக்கிறார். முதலில் படத்தில் நடிப்பது குறித்து யோசித்த கே.ஆர்.விஜயா, இயக்குநர் சொன்ன கதையைக்கெட்டு இந்த படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.

‘அன்னயும் ரசூலும்’ ரீமேக்கில் ஆண்ட்ரியா!
அண்மையில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘அன்னயும் ரசூலும்’. இந்தப் படத்தை ராஜீவ் ரவி இயக்கியிருந்தார்.


இதில் பிரபல இயக்குனர் ஃபாசிலின் மகன் ஃபஹத் ஃபாசில் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஆன்ட்ரியா ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில் நடித்த போதுதான் நடிகை ஆண்ட்ரியாவை தீவிரமாக காதலிப்பதாக இயக்குனர் பாசில் மகனும், பிரபல மலையாள நடிகருமான பாஹாத் பாசில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதனை ஏற்க மறுத்த ஆண்ட்ரியா புதிய படத்தில் பாசிலுடன் நடிக்க வந்த வாய்ப்பைவும் உதறி தள்ளினார்.
இந்நிலையில் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ரீமேக் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் கேட்டுள்ளதாக ‘அன்னயும் ரசூலும்’ மலையாள படத்தின் தயாரிப்பாளர் வினோத் விஜயன் தெரிவித்துள்ளார். மலையாளத்தில் ஆண்ட்ரியா நடித்த கேரக்டரில் தமிழிலும் ஆன்ட்ரியாவே நடிக்க இருக்கிறாராரம்.

பட்டத்து யானை நாயகியை தேடி வரும் வாய்ப்புகள்
மலைக்கோட்டை படத்தை தொடர்ந்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷால்-பூபதி பாண்டியன் கூட்டணி மீண்டும் கைகோர்த்திருக்கும் படம் பட்டத்து யானை.
இதில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமாகியுள்ளார் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா. திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை தனது மகளுக்கு இருந்ததால்தான் பட்டத்து யானை படத்தின் மூலம் அறிமுகம் செய்தாராம் அர்ஜூன். அதோடு படப்பிடிப்பு சென்னையில் நடந்த போது கூட தன் மகளை பார்ப்பதற்காக ஸ்பாட்டுக்கு செல்லவில்லையாம். காரணம் என்னவென்றால் தன்னை பார்த்தால் மகளுக்கு நடிப்பு சரியாக வராது என்பதால்தான்.


இருப்பினும் ஐஸ்வர்யாவின் நடிப்பு குறித்து இயக்குனர் மற்றும் விஷாலிடம் அடிக்கடி கேட்டு தெரிஞ்சிகிடுவாராம். அந்த வகையில் தனது மகள் முதல் படம் என்பது தெரியாத அளவுக்கு நடித்திருப்பதாக சொல்கிறார்கள். இந்நிலையில் பட்டத்து யானை படம் வெளியாவதற்குள் மேலும் இரண்டு நிறுவனங்கள் ஐஸ்வர்யாவின் கால்ஷீட் கேட்டுள்ளனர்.
ஆனால் அர்ஜூனோ படம் வெளியான பிறகு புதிய படங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறி அனுப்பி வைத்துவிட்டாராம். இதனிடையே பட்டத்து யானை திரைப்படம் வரும் 26ம் தேதி திரைக்கு வர உள்ளது.
-செய்திகளுக்கு நன்றி : தினமணி
-படங்களுக்கு நன்றி : கூகிள் இணையம்
-''பரிவை' சே.குமார்.

1 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

நன்றிங்க!அப்பப்ப சினிமா நியூசுங்களும் தாறதுக்கு!!!