மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 23 அக்டோபர், 2014

வலைச்சர நான்காம் நாள் : கவிதை அரங்கேறும் நேரம்

வலைச்சரத்தில் முன்றாம் நாளான இன்று கவிஞர்கள் சிலரைப் பற்றிப் பகிர்ந்திருக்கிறேன். அதில்...

பள்ளியில் படிக்கும் போது உருவாகாத கவிஞர்கள் எல்லாம் கல்லூரிக்கு சென்றதும் உருவெடுக்க ஆரம்பித்து விடுவார்கள். எனது நட்பு வட்டத்தில் முருகன்ஆதிஇளையராஜாபிரபாகர்சுபஸ்ரீஇவர்கள் மட்டுமே திறமையான கவிஞர்கள். அதிலும் கவிதைகட்டுரைப் போட்டிகள் என்றால் முருகனும் சுபஸ்ரீயும் கண்டிப்பாக கலந்து கொண்டு கல்லூரிக்கு பரிசைத் தட்டிவருவார்கள். மற்றவர்கள் எல்லாம் எழுதுவதும் இல்லை அதைப் படிப்பதும் இல்லை.
பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல இவர்களுடான நட்பால் நாமளும் கவிதையின்னு கிறுக்க ஆரம்பிச்ச நேரம் சின்னக் கவிதையே வராது. பக்கம் பக்கமாத்தான் எழுத வரும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஓரளவுக்கு எழுத வந்தபோது நண்பர்களின் காதலுக்கு கவிதை எழுதிக் கொடுக்கும் நிலை வந்தது. நம்ம பயக பொண்ணு யாரு... அவனுக்கு உறவா இல்லை பழக்கமா... எங்க படிக்குது... என எல்லாம் விவரமாச் சொல்லஅதை வைத்து அப்படியே ஒரு கவிதை உருவாக்கிக் கொடுத்து விடுவேன். இதில் முக்கியமா கவனிக்க வேண்டியது என்னன்னா... அப்போதைக்கு அம்புட்டும் சக்ஸஸ் ஆனதுதான். அதுக கவிதைக்கு மயங்குச்சுகளோ இல்ல இவன வேண்டான்னு சொன்னா இன்னம் அந்தக் கிறுக்கனுக்கிட்ட கவிதை வாங்கிகிட்டு வந்து கொன்னுடுவான்னு நினைச்சதுங்களோ தெரியல. இன்றைய நிலவரப்படி எத்தனை காதல் வாழ்கிறது என்பதும் அடியேனுக்குத் தெரியாது.

தொடர்ந்து வாசிக்க நீங்க வலைச்சரத்துக்குத்தான் வரணும்... அதுக்கு இங்கு சுட்டுங்கள்.

அப்படியே இந்தப் பாட்டையும் பாத்துட்டுப் போங்க...


-'பரிவை' சே.குமார்

2 எண்ணங்கள்:

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இந்தப்பாட்டு புதுசு இப்பதான் கேட்கிறோம்....நன்றாக இருக்கின்றதே! பகிர்வுக்கு மிக்க நன்றி!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பாட்டு நஹ்ல்லாருக்கு ஆனா எடுத்த விதம் ..ம்ம்ம்ம்ம்ம் ஸாரி..