மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 22 நவம்பர், 2009

பள்ளிப்பருவம் - III

டுநிலைப் பள்ளி முடித்து மேல்நிலைப் பள்ளிக்குப் பயணம். அதற்கென நுழைவுத்தேர்வு வேறு. தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். சிபாரிசிலும் சிலர் சேர்த்துக் கொள்ளப்படுவதுண்டு. (ஏழைக்களுக்கு அந்த கொடுப்பினை எங்கும் இல்லை. அரசியல்வாதியாகவோ அல்லது அந்த ஏரியாவில் செல்வாக்கு மிகுந்தவரின் பிள்ளையாகவோ அல்லது ஆசி பெற்றவரின் பிள்ளையாகவோ இருக்க வேண்டும்.)

பரிட்சை எழுதிவிட்டு தினமும் தபால்காரரை எதிர்பார்த்து காத்திருக்க, ஒருநாள் லெட்டர் வந்தது. பிரிக்கும்வரை இதயம் எக்ஸ்பிரஸ் ரயிலாய் தடதடத்தது. (பெயிலா இருந்தா அம்மா கொன்னுபுடுவாங்களே...)நல்லவேளை தேறிவிட்டேன். பள்ளியில் சேர்க்க வரச்சொன்ன அன்று அம்மா என்னை பள்ளிக்கூடம் கூட்டிக்கொண்டு போய் சேர்த்துவிடும்படி சித்தப்பாவிடம் கூற, அவர் வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார். (அன்று அவர் மீது கோபம் வந்தது. ஆனால் இன்றும் அவர் மீது உள்ள மரியாதை மட்டும் குறையவில்லை.)

எங்கள் ஊரில் இருந்து குறுக்காக நடந்து கூட்டிக்கொண்டு போய் அம்மா சேர்த்துவிட்டார். எங்கள் படிப்புக்காக அதிகம் கஷ்டப்பட்டவர் எங்கள் அம்மாதான். (அப்பா வேலை காரணமாக வெளியூரில் இருந்தார்.)

பெரிய பள்ளியில் சேர்ந்தாச்சு. ஒண்ணாப்பு முதல் எட்டாப்பு வரை எங்கூட படித்த நண்பர்களைப் பிரிந்து புது இடம். மனசுக்கு கஷ்டமாக இருந்தாலும் புது பள்ளிக்கூடம் போற சந்தோஷம்.முதல் நாள் பள்ளிக்கு சென்றால் இருவரைத்தவிர அனைவரும் புதுசு. என்னுடன் ஒண்ணாப்பு முதல் படித்த சிவபாலமூர்த்தியும் சுந்தரும் என் வகுப்பில். குத்தாலத்தில் குளித்தது போல் இருந்தது. (இருக்காதா பின்னே... யார்கிட்ட போயி பேச முடியும்... நமக்கு ஒரு துணைதானே.)

அது ஒரு கனாக்காலம் தான் போங்க. நாலு கிலோ மீட்டர் சைக்கிள் பயணம். பரிட்சை முடிந்து பள்ளிக்குப் போனா பரிட்சைப் பேப்பர் கொடுக்குறதுக்குப் பதிலா தலைமை ஆசிரியர் கிளாசுக்கு வந்து மார்க்கை வாசிக்கிறாருங்க. (என்ன கொடுமை சார் இது.) எந்திரிக்கச் சொல்லி வாசிச்சு, கடைசியில எல்லாப் பாடத்திலயும் பாசனவங்க எந்திரிங்க... ஒரு பாடம் பெயிலானவங்க எந்திரிங்க... ரெண்டுபாடம் பெயிலானவங்க... எல்லாத்திலயும் பெயிலானவங்க எந்திரிங்கன்னு சொல்லி நோகடிச்சுடுவாரு. (சை... அந்த அனுபவம் இருக்கே... நல்லவேளை பசங்க மட்டுமே படிக்கும் பள்ளியாப்போச்சு.)

எப்படியோ நாலு வருசம் அப்புடியே ஓடுச்சுங்க, நம்ம நல்லநேரம் பெயிலாகாமல் படிச்சு வெளியில வந்துட்டோம். (சாதனைதான் போங்க). ஒரு சில ஆசிரியர்கள் மேல் என்னை அறியாமல் ஈர்ப்பு வந்தது.

அதில் குறிப்பிடத்தக்கவர்கள் சவரிமுத்து ஐயா, தாசரதி ஐயா, ராய் சார், ஜோசப் ராஜ் சார், சொக்கலிங்கம் சார், ஜோசப் சார் (இவரு இங்கிலீஷ் எடுத்தாரு. பரிட்சையில பிட் அடிச்சவனை பேப்பர் கொடுக்கும் போது கரெக்டா புடிப்பாரு. அனா அவனை அடிக்கமாட்டாரு. யாரப்பா பார்த்து எழுதினேன்னு கேட்டு அவனை வரச்சொல்லி பளார்ன்னு ஒரு அறை விடுவாரு பாருங்க. அப்பா... நானும் வாங்கியிருக்கேன். அப்புறம் யாருக்கும் காட்டுறதில்லையில்ல...எப்புடி மனசு வரும்... ). சாமிநாதன் சார் (புளியங்குச்சிய எடுத்தா குச்சி நொறுங்கிறவரை அடிதான் போங்க), ஆகியோர்.

இவர்களில் நான் கல்லூரியில் படிக்கும் போது கலை இலக்கியப் பெருமன்றத்தில் இருந்த போது சவரிமுத்து ஐயா, தாசரதி ஐயாவுடனான தொடர்பு தொடர்ந்தது. அது இன்றுவரை தொடர்கிறது. அது எனது பாக்கியம்.

அடுத்த கட்டுரையில் மறக்க முடியாத கல்லூரிக்காலம் பற்றி பார்ப்போம்.

-சே.குமார்

6 எண்ணங்கள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

என்னுடைய பள்ளி ஞாபகங்களை தூண்டி விட்டீர்கள்
நன்றி :))

வாழ்த்துகள் நண்பரே

'பரிவை' சே.குமார் சொன்னது…

பள்ளிப் பருவம் ஒரு சுகமான அனுபவம் நண்பரே..

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...

அடிக்கடி வாங்க.

அன்புடன் மலிக்கா சொன்னது…

சென்ற காலத்தில் சொக்கிய அத்தனையும் கண்முன்னே..

'பரிவை' சே.குமார் சொன்னது…

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...

cheena (சீனா) சொன்னது…

அன்பின் குமார்

அடி வாங்காமல் பள்ளிப் பருவமா - இருக்க இயலாதே ! - இயல்பான அடி தானே ! வாழ்வினில் நம்மை முன்னேற்றும் அடி அதுதான்.

நல்வாழ்த்துகள் குமார்
நட்புடன் சீனா

'பரிவை' சே.குமார் சொன்னது…

varukaikkum karuththukkum nanri sir