மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

நீ...!




ஒரு கவிதை சொல்லு
தோளில் சாய்ந்து
காது கடித்து
சிணுங்கலாய் கேட்டாள்...

"நீ...!"
என்றதும் ....
உனக்கு எப்பவும்
குறும்புதான் என்று
காது திருகி
சிரித்தவள்...

நான் கேட்டது
கவிதையை என்றாள்...

மீண்டும் "நீ..!" என்றவன்
கவிதை சொல்லச்
சொன்னபோது
உன் முகம் மொட்டாய்...

கவிதை சொன்னதும்
உன் முகம்
மலர்ந்த பூவாய்...

நீ... நீதான்
என் கவிதை என்றதும்
கவிதையின் பரிசாய்
 ஈர இதழ்கள்...!

-"பரிவை" சே.குமார்.

11 எண்ணங்கள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

கவிதையே கவிதை பாடச் சொன்னது
அருமையான சிந்த்னை
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ரொம்ப நல்லாருக்குது கவிதை..

சசிகலா சொன்னது…

பூவாய் மலர்ந்தது முகம் அழகான வரிகள்.

r.v.saravanan சொன்னது…

வித்தியாசமாய் ஒரு கவிதை நல்லாருக்கு குமார் வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகு வரிகள்... பாராட்டுக்கள்... நன்றி...

சுசி சொன்னது…

ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க..

ஹேமா சொன்னது…

கவிதைக்கே ஒரு கவிதையா !

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

கவிதை தித்தித்தது.

மனோ சாமிநாதன் சொன்னது…

அருமையான கவிதை!

Kavinaya சொன்னது…

ச்வீட்! :)

'பரிவை' சே.குமார் சொன்னது…

கருத்திட்ட அனைவரும நன்றிகள்.