மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 31 டிசம்பர், 2012

2012.... 2013



கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றில்
நல்லவற்றை எடுத்துக் கொண்டும்...
கெட்டவற்றை விரட்டி விட்டும்
புத்தாண்டுக்குள் அடியெடுத்து வைப்போம்....

இயற்கையின் வழியான அழிவுகளை
தடுக்க நம்மால் இயலாது...
இயன்றவரை நல்லதே நினைப்போம்...
நல்லதே செய்வோம்...

தில்லி சகோதரிக்கு நிகழ்ந்த
கொடுமைக்காக வெட்கப்படுவோம்...
வேதனையோடு இனி இதுபோல்
நடக்கவிட மாட்டோம் என
சபதம் செய்வோம்...

அரக்க குணத்தையும்
அராஜக செயல்களையும்
அடியோடு ஒழிப்போம்...
நம் சத்தியம் காப்போம்...

சாதி மத சண்டைகள்...
தண்ணீர் பிரச்சினைகள்...
பாலியல் வன்முறைகள்...
அரசியல் அக்கிரமங்கள்

அனைத்தும் ஒழித்து
அமைதியான வாழ்வை
எல்லோருக்கும் கொடுக்கட்டும்...
பிறக்கும் புத்தாண்டு 2013....


போய் வா இரண்டாயிரத்துப் பனிரெண்டே...
வருக வருக இரண்டாயிரத்துப் பதிமூன்றே...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...



கீழே இருக்கும் லிங்க் நண்பர் ஸ்டார்ஜன் அவர்கள் அனுப்பியது. இதை கிளிக்கி நீங்களும் வாழ்த்தை ஏற்றுக் கொள்ளுங்கள்...



புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,
'பரிவை' சே.குமார்

8 எண்ணங்கள்:

r.v.saravanan சொன்னது…

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் குமார்

ராமலக்ஷ்மி சொன்னது…

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள், குமார்!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் பதிவர் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

அம்பாளடியாள் சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

புத்தாண்டு வாத்துக்கள்
க்ரீட்டிங்க்ஸ் கார்டு அருமை.

ஆத்மா சொன்னது…

நல்ல ஆலோசனை வரிகள்..

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும்

Avargal Unmaigal சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

ஹேமா சொன்னது…

அன்பான புது வருட வாழ்த்தும் உங்கள் இனிய குடும்பத்துக்கு !