மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 10 ஏப்ரல், 2013

அஞ்சலி - நீடிக்கும் மர்மம்....

அஞ்சலி... 1

மரியாதைக்குறிய அண்ணன் திரு. மணிஜி அவர்களின் துணைவியார் அவர்கள் இன்று காலை அகால மரணமடைந்தார். அவரை இழந்து வாடும் அண்ணனுக்கும் மகளுக்கும் இறைவன் தாங்கும் சக்தியைக் கொடுக்கட்டும் என்று சொல்ல முடியாத இழப்பு இது. 

 அண்ணியின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.

*******
அஞ்சலி... 2

என் மீது சின்னக் கீரல் விழுந்தாலும் என் சித்தியும் இயக்குநர் களஞ்சியமும்தான் பொறுப்பு என்று பரபரப்பு ஸ்டேட்மெண்ட் விட்டுவிட்டு ஹைதராபாத் பறந்தார். அங்கு சித்தப்பாவுடன் ஹோட்டலில் தங்கியிருந்த போது மாயமாகிவிட்டார்.

அதன் பிறகு படப்பிடிப்பிற்கு வராததால் நடிகர் வெங்கடேஷ் வழக்குத் தொடரப் போவதாகவும், போராளியான என்னை களங்கப்படுத்திய அஞ்சலியைப் பற்றி நிறைய விஷயங்களை வெளியிட வேண்டியிருக்குன் என்று சொல்லி களஞ்சியம் போலீஸில் புகார் கொடுத்திருப்பதாகவும் நான் அவளை என் மகளாக வளர்த்தேன்... என்னைக் காயப்படுத்திவிட்டாள் என்று சித்தி புலம்பியதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

இதனிடையே இன்று காலை சித்தி சொன்னதாக வந்த செய்தி கீழே உங்கள் பார்வைக்காக...



பல முறை ஓடிப் போனவர் அஞ்சலி: சித்தியின் அறிக்கை 

அஞ்சலி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை காதலித்து அவர்களுடன் வீட்டை விட்டு ஓடிப் போனவர் என்று அவரது சித்தி பாரதி தேவி தெரிவித்துள்ளார். இது குறித்து அவருடைய சித்தி பாரதி தேவி செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் அஞ்சலியின் சித்தி என்பது உண்மையே. அவள் என் அக்கா பார்வதி தேவியின் மகள். 

என் அக்கா ஆந்திராவில் உள்ள ஜெகன்பேட்டையில் வசித்து வருகிறார். ஒரு ஆண் குழந்தை மற்றும் அஞ்சலியை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்ட என் அக்காவை விட்டுவிட்டு அவரது கணவர் ஓடிவிட்டார். இதையடுத்து என் அக்கா இரண்டாவது முறையாக திருமணம் செய்து 2 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகளை பெற்றார். 

இந்நிலையில் பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்த அஞ்சலி ஸ்ரீராம் என்ற பையனை காதலித்து வீட்டை விட்டு ஓடிவிட்டாள். ஒரு மாதம் கழித்து தான் அவளை கண்டுபிடிக்க முடிந்தது. 


சென்னையில் வசித்த நான் ஜெகன்பேட்டைக்கு சென்று கட்டிய பாவாடை தாவணியுடன் அஞ்சலியை என்னுடன் அழைத்து வந்தேன். எனக்கு பெண் குழந்தை இல்லாததால் அவளை என் மகளாக வளர்த்தேன். நான் கஷ்டப்பட்டு அவளை நடிகையாக்கினேன். அவளுக்கு இயக்குனர் களஞ்சியம் 6 மாதங்கள் நடிப்பு பயிற்சி அளித்தார். 

அஞ்சலி முதன்முறையாக செலுங்கு படம் ஒன்றில் சம்பளம் வாங்காமல் நடித்தாள். அந்த படம் ஓடவில்லை. இதையடுத்து மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தாள். அதுவும் ஓடவில்லை. அவள் முதன்முதலாக கன்னட படம் ஒன்றுக்கு தான் சம்பளம் வாங்கினாள். அவளுக்கு ரூ.50,000 சம்பளம் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு மலையாள படம் ஒன்றில் நடித்து ரூ.1 லட்சம் சம்பளம் பெற்றாள். 

கற்றது தமிழ் படத்திற்கு அவளுக்கு சம்பளம் இல்லை. ஆயுதம் செய்வோம் படத்திற்கு ரூ.1 லட்சம் கொடுத்தார்கள். எங்கேயும் எப்போதும் படத்திற்கு ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கினாள். கருங்காலி படத்திற்கு ரூ.8 லட்சம் கொடுத்தனர். சேட்டை படத்திற்கு தான் அவளுக்கு பெரிய தொகையாக ரூ. 20 லட்சம் கிடைத்தது. 


அவள் சம்பாதித்த பணத்தில் அவள் பெயரில் வளசரவாக்கத்தில் வீடு வாங்கி கொடுத்தேன். இதற்கிடையே அவள் எத்தனை முறை வீட்டை விட்டு ஓடினாள் என்பது எனக்கு மட்டுமே தெரியும். 

ஒரு முறை என்னை வீட்டின் அறைக்குள் பூட்டிவிட்டு கன்னட இயக்குனர் பரத்ஷா என்பவருடன் ஓடிவிட்டாள். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வெளியே வந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு சென்று பெங்களூர் செல்லும் பேருந்தில் இருந்த அவளை வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

இவ்வளவு கஷ்டப்பட்டு அவளை நட்சத்திர நடிகையாக்கியதற்கு அவள் பரிசாக என்னை சித்தி என்று கூறிவிட்டாள் என்று கண்கலங்கியபடி கூறினார். 


பாரதிதேவி தெலுங்கு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:

அஞ்சலி நடிகையானதும் அவள் சம்பளத்தில் ஒரு பங்கு எனக்கும், ஒரு பங்கு அஞ்சலிக்கும், ஒரு பங்கு அவளது அம்மாவுக்கும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

அஞ்சலிக்கு முதலில் பட வாய்ப்பு கொடுத்தவர் என்ற பெயரில் அவளுக்கு களஞ்சியம் சில ஆலோசனைகள் கூறுவார். அவர் குடும்ப விஷயத்தில் தலையிடுவதில்லை. அஞ்சலிக்கு கோடிக் கணக்கில் எல்லாம் சொத்து இல்லை. அவள் எங்கு இருக்கிறாள் என்று தெரிய வந்தாலே போதும். அவளின் அண்ணன் ரவிசங்கர் மீது தான் சந்தேகமாக உள்ளது என்றார்.

பத்திரமாக இருக்கிறேன் அம்மா : அஞ்சலி

அஞ்சலி இன்று தனது அம்மா பார்வதிக்கு போன் செய்து தான் பத்திரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். தான் இருக்கும் இடத்தை தெரிவிக்காத அவர் தற்போதைய பிரச்சனைகளால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் அதனால் தான் ஹோட்டலில் இருந்து சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

என் மகளை கடத்திவிட்டார்கள்: சித்தி

அஞ்சலி குறித்து விதவிதமான செய்திகளை சொன்ன சித்தி இன்று காலை சொன்னதற்கு மாறாக காவல்நிலையம் சென்று என் அக்கா மகள் திரிபுரசுந்தரி என்ற அஞ்சலியை எனது மகளாக சுவீகாரம் எடுத்து வளர்த்து வந்தேன். திடீரென என்னை பற்றி தவறாக சொல்லி காணாமல் போய்விட்டாள்.

அவரை யாரோ கடத்திக் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள். அவளுக்கு பெரிய நோய் இருக்கு.... மாத்திரை சாப்பிடாவிட்டால் ஆபத்தாகிவிடும்... அது என்ன நோய் என்று சொல்ல மாட்டேன். அப்படி சொன்னால் அவளது சினிமா வாழ்க்கை பாதிக்கும்.

எல்லாச் சொத்தையும் அவளுக்கே கொடுத்து விடுகிறேன். எப்படியாவது அவளைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்று காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்.

காணாமல் போன அஞ்சலி என்ன ஆனார்.... சித்திக்கும் களஞ்சியத்துக்குமான உறவு என்ன... சித்தி மாற்றி மாற்றி பேசக் காரணம் யார்... இந்த நாடகத்தின் பின்னணி என்ன என எல்லாம் இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்று நம்புவோமாக...




நன்றி : தமிழ் இணைய இதழில் சுட்ட படங்களுக்கும் சில செய்திகளுக்கும்...

-'பரிவை' சே.குமார்

3 எண்ணங்கள்:

Menaga Sathia சொன்னது…

OHHH what a sad news,Heartfelt condolences to Maniji Sir& Family!!

Yoga.S. சொன்னது…

என்னடா கொஞ்ச நாளா பரபரப்பு?!செய்திகளைக் காணோமேன்னு பார்த்தேன்!என்னமோ நடக்குது ஒலகத்திலே!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நடிகையின் வாழ்க்கையும் சினிமா மாதிரி இருப்பது வேதனைதான்