மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 25 அக்டோபர், 2014

வலைச்சர ஆறாம் நாள் : உன் சமையல் அறையில்

வலைச்சரம் ஆறாம் நாள் பகிர்வாக உன் சமையல் அறையில் என்ற தலைப்பில் பகிர்ந்தேன். இதில் சமையல் குறித்து எழுதும் தளங்களைத் தொகுத்தளித்தேன். அதில்...

மையல் செய்வது என்பது ஒரு கலை. அந்தக் கலை எல்லாருக்கும் அவ்வளவு சுலபமாக வருவதில்லை. ஆண்களை விடுங்கள்... பெண்களில் கூட எல்லாரும் நல்லாச் சமைப்பதில்லை. மீன் குழம்பு என்பது இப்படித்தான் இருக்கும் என்றாலும் ஒரு வீட்டில் நான்கு பெண்கள் இருந்தால் நான்கு பேரின் கைவண்ணமும் ஒன்றாக இருப்பதில்லை. சமையலில் கைப்பக்குவம் மிகவும் முக்கியம். எங்க ஐயா (அப்பாவின் அப்பா) ஒரு சமையல் மேஸ்திரி. மிகச் சிறந்த சமையல்காரர். இவரின் கைப்பக்குவத்துக்கே தனி மரியாதை இருந்தது. எங்கப்பாவுக்கும் சித்தப்பாவும் சமையல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ரகம்.
எங்க வீட்டில் அக்காக்கள் சமையல் அப்போது அருமையாக இருக்கும். இப்போது பிள்ளைகளுக்காக காரம் குறைத்து உணவில் சுவை குறைத்து விட்டார்கள். எங்கள் நால்வரில் தம்பி தவிர மற்ற மூவரும் நன்றாகச் சமைப்போம். சும்மாவே செட்டிநாட்டுக்காரர்கள் என்றால் சாப்பாட்டுப் பிரியர்கள் என்பார்கள். விதவிதமாக சமைப்பதில் எங்க ஆளுங்க கில்லாடிங்க. விருந்து உபச்சாரத்திலும் குறை வைக்க மாட்டார்கள். இப்போ இங்கு கூட நான் சமைக்கப் போனால் பக்கத்து அறை நண்பர்கள் செட்டிநாட்டு வாசனை மூக்கைத் துளைக்குது என்று சொல்லியபடி இன்று என்ன சமையல் என்று கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.
சாப்பாட்டு விஷயத்துல கடவுள் நமக்கு குறையே வச்சதில்லை. திருமணத்துக்கு முன்பு வரை அம்மாவுடன் அதிகம் இருந்தது நான்தான். அம்மாவின் கைப்பக்குவம் சான்ஸே இல்லை. என்ன செய்தாலும் இன்னும் கொஞ்சம் சாப்பிடணும் போலத்தான் இருக்கும். கல்லூரியில் படிக்கும் போது வாரச்சந்தைக்குப் போவது நான்தான். எனவே இப்போது ஊருக்குப் போனாலும் காய்கறியாக இருந்தாலும் மீனாக இருந்தாலும் தம்பிய போய் வாங்கிட்டு வரச்சொல்லுங்க நல்லா பாத்து வாங்கிக்கிட்டு வருவான்னு சொல்லுவாங்க. திருமணத்துக்குப் பின் மனைவியின் சமையல்.... அம்மாவின் சமையல் செட்டிநாட்டுச் சுவை என்றால் மனைவியின் கைப்பக்குவமோ மதுரைச்சுவையுடன் செட்டிநாட்டுப் பாணி... ஆஹா... என்ன செய்தாலும் சூப்பரா இருக்கும். இப்போ விஷாலின் ஆசிரியைக்குப் பிடித்துப் போய் தினமும் விஷாலின் சாப்பாட்டில் ஒரு வாயாவது அவன் கையால் வாங்கி சாப்பிட்டு விடுவாராம். அந்தளவுக்கு ருசி.... மதுரை அம்சவல்லிபவான் கைவண்ணமாச்சே... சும்மாவா.

தொடர்ந்து வாசிக்க வலைச்சரம் வாங்க... அதுக்கு முன்னாடி உங்களுக்காக இந்தப் பாடல்...
என் வீட்டுச் சன்னல் எட்டி


-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

Yarlpavanan சொன்னது…

சிறந்த அறிமுகங்கள்
தொடருங்கள்

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா

பகிர்வுக்கு நன்றி தொடருகிறேன் வலைச்சரத்தை..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-